இவ் உபகரணங்களை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ். திருமறைக் கலாமன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உட்பட வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்ட முகாமையாளர்கள், எனப்பலர் கலந்துகொண்டனர்.
கடந்த மூன்று மாதங்களாக தேசிய வீடமைப்பு அதிகார சபையுடன் சீடா மற்றும் தொழிற்பயிற்சிஅதிகாரசபை இணைந்து யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மேசன் தொழிற்பயிற்சியை வழங்கியிருந்தது.
அதன்படி மூன்று மாத பயிற்சியை நிறைவு செய்த 400 பேருக்கு மேசன் தொழில் மேற்கொள்வதற்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
3 மாத பயிற்சியின் போது பயிற்சி பெற்றவர்களுக்கு சீருடைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவுகளுடன் மேசன் தொழில் மேற்கொள்வதற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.