கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது!

245 0
மன்னாரில் 30 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரும், கொழும்பு காவல்துறை விசேட செயலணியினரும் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மன்னார் – எழுந்தூர் சந்திப் பகுதியில் அவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
விற்பனைக்காக கொண்டு சென்றபோதே குறித்த கேரள கஞ்சாவுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேகத்துக்குரியவர்களும் மன்னார் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட ஆறு உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புல்மோட்டை பகுதியை அண்மித்த கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், படகொன்றும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Leave a comment