5 கடவுச்சீட்டுகளுடன் வெளிநாட்டவர் கைது

205 0

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து 5 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்த போது அவரிடம் இருந்து கஞ்சா கலக்கபட்ட மாவா எனப்படும் போதைப் பொருள் 70 பக்கட்டுகளும், 16 சட்டவிரோத சிகரெட்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சந்தேகநபரை இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment