அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளும் கட்சியின் உறுப்பினர்களே கொண்டுவரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் அமைச்சர் விஜயதாசவுக்கு எதிரான நம்பிக்iகையில்லா பிரேரணை தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதுடன்,இதில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையானது எதிர்வரும் வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.