வவுனியாவில் வீடு ஒன்றில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

217 0

வவுனியாதேக்கசவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுஎஸ்.கணேசலிங்கம் (வயது 70) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

வவுனியாதேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வயது முதிர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வசித்து வந்த நிலையில் இன்று காலை குறித்த வீடு மதியம் வரை திறக்கப்படாமையால் அருகில் வசிப்பவர்கள் சந்தேகம் அடைந்து வீட்டில் வசித்தவரின் பெயரைக் கூறி அழைத்துள்ளனர்ஆனால் வீடு நீண்ட நேரமாகவும் திறக்கப்படாமையால் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் வீட்டை திறச்து பார்த்த கோது குறித்த குடும்பஸ்தர் சடலமாக காணபபட்டுள்ளார்இதனையடுத்து பொலிசார் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Leave a comment