கட்சியை பிரிக்க சிலர் சதி – சுதர்ஷணி பெர்ணாண்டோ

343 0

Sutharsiniஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுப்படுத்தும் நோக்கில் சில பிரிவுகள் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மகளீர் முன்னணியின் தலைவர் சுதர்ஷணி பெர்ணாண்டோபுள்ளே சுமத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிளவுப்படுத்த வேண்டிய அவசியம் சிலருக்கு இன்று ஏற்பட்டுள்ளது.எனினும் இந்த கட்சி பிளவுப்படுவதன் நன்மை பிறரையே சென்றடைகின்றது.ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பொறுத்தவரை அது தனிஒருவருக்கோ, சிலருக்கோ உரிமையான கட்சி அல்ல.

இந்தநிலையில் தலைவர்கள் மாறினாலும் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியது அனைவரினதும் பொறுப்பு என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மகளீர் முன்னணியின் தலைவர் சுதர்ஷணி பெர்ணாண்டோபுள்ளே சுட்டிக்காட்டியுள்ளார்.