துருக்கியில் இரட்டை குண்டுத் தாக்குதல் – 8 பேர் பலி

343 0

131துருக்கியில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுத் தாக்குதலில் குறைந்த பட்சம் 8 பேர் பலியாகினர்.பாதுகாப்பு படையினர் பயணித்த வாகனம் ஒன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பலியானவர்களில் 5 பேர் பொது மக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 25க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.குர்திஸ் தொழிலாளர் கட்சியின் போராளிகள் இந்த தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.துருக்கியின் தென் கிழக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.