முன்னாள் கடற்படை பேச்சாளர் உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

185 0

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படை பேச்சாளர் கொமடோர் டீ.கே.பீ தசநாயக்க உள்ளிட்ட கடற்படை வீரர்கள் 6 பேர் இம்மாதம் 24ம் திகதி வரை  இன்று மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதனுடன் தொடர்புடைய வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2008 -2009 ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட இவர்கள் குற்றப்புலனாய்வு துறையால் கைது செய்யப்பட்டனர்.

எவ்வாறாயினும் , இன்றும் முன்னாள் கடற்படை பேச்சாளரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாத நிலையில் , அவர் தற்போதைய நிலையில் வெலிசர கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a comment