சம்பூர் வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

220 0

திருகோணமலை, சம்பூர் வைத்தியசாலைக்கு முன்னால் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

இன்று காலை 09 மணியளவில் பிரதேச மக்கள் இணைந்து ஆரப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

சம்பூர் வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், அதனை நிவர்த்தி செய்து தருமாறும் கோரியே பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வைத்தியசாலைக்கு வாரத்தில் ஓரிரு தினங்களில் மாத்திரமே வைத்திர்கள் சமூகமளிப்பதாகவும், இதனால் நோயாளிகள் சிரமப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வைத்தியசாலை அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டமை கூறத்தக்கது.

 

Leave a comment