நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, காலி, மாத்தறை, பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும்.
அதனுடன், மின்னல்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்து கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரியுள்ளது.