எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் வெளிநாடுகளுடனான ஒப்பந்தத்தின் போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்காக இல ங்கையின் ஒரு அங்குல நிலவுரிமையை கூட வழங்க முடியாது என்ற விடயத்தை சேர்க்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கை சீன நட்புறவுச் சங்கத்திற்கு அறுபது ஆண்டுகள் பூர்தியாவதையிட்டு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பூர்தியாவதையிட்டு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்காலத்தில் இலங்கை பின்பற்றுகின்ற வெளிநாட்டு கொள்கையினால் அனைத்து வெளிநாடுகளுடனுமான நட்புறவு வலுவாக பேணப்படுகின்றது. எமது நாட்டின் இந்த கொள்கையானது உலக பொருளாதார நடவடிக்கைகளுக்கும் முக்கியமான அம்சமாக கருதப்படுகின்றது.
காலத்திற்கு ஏற்ப இன்று உலக பொருளாதார பலவான்களாக இருக்கின்ற நாடுகளுடனான உறவு மிக முக்கியமானது. நாம் வறுமையான நாடு என்பதை கஷ்டத்துடனாவது ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதனால் தான் பொருளாதார பலமிக்க நாடுகளுடைய உதவி எமக்கு தேவைப்படுகின்றது.
அந்த நாடுகளுடன் உறவுகளை பேணினாலும் இலங்கையின் சுயாதீன தன்மையை நாம் அவ்வண்ணமே பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். உலக பலனாக இருக்கின்ற நாடுகளில் வாழும் மக்கள் சமூகம் போன்றதொரு மேம்பட்ட சமூகமாக எமது நாட்டவரும் உருவெடுக்க வேண்டும்.
அதேபோல் நாட்டின அபிவிருத்தி பயணத்தில் இணைந்துக்கொள்ள எமக்கு தூரநோக்குடைய சிந்தனைகள் மிக அவசியமாகும் என்பதையும் நாம் உணர வேண்டும். மேலும் வெளிநாடுகள் வரிசையில் சீனா எமக்கு வழங்கிய உதவிகளை ஒருபோதும் மறந்துவிட முடியாத உண்மை.
புலிகளுடனான யுத்த காலத்தில் சீன படையினர் வழங்கிய பயிற்சிகள், நிதி மற்றும் தொழில்நுட்பம் சார் உதவிகள் என்பனவே யுத்தவெற்றிக்கு பெரிதும் பக்கபலமாக காணப்பட்டது என்பது ரகசியமல்ல. நாட்டை பிளவு படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட யுத்தின் போது சீனாவின் பங்களிப்பை நாம் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அதேபோல் அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்திலும் சீனா பெரிதும் எமக்கு உதவி்யிருந்தது. அவ்வாறிருந்தும் எமது அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தினை மேற்கொண்டிருந்தமை குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படிருந்தன. இருப்பினும் அவற்றை கருத்திற்கொள்ளமால் நாட்டின் நலன் கருதியே நாம் செயற்பட்டோம். மறுபுறத்தில் அந்த துறைமுகத்தின் நி்லவுரிமை எமது நாட்டிற்கே இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தோம்.
அதனால் எதிர்காலத்தில் வெளிநாடுகளுடன் செய்துக்கொள்ளப்படவுள்ள ஒப்பந்தங்களிலும் இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் போது நாட்டின் ஒரு அங்குல நிலவுரிமையை கூட வெளிநாடுகளுக்கு வழங்கபோவதில்லை என்ற நியதி சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். இது தொடர்பிலான தவறான கருத்துக்களை சிலர் மக்கள் மத்தியில் பரப்ப முற்படுகின்ற காரணத்தினாலேயே இன்று நான் விளக்கமளிக்கின்றேன் என்றார்.