விமல் விலகியமை தாக்கத்தை ஏற்படுத்தாது – சபாநாயகர் 

257 0

விமல்வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி விலகியமையானது, அரசியலமைப்பு பேரவையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவையில் இருந்து தேசிய சுதந்திர முன்னணியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறுவதாக தெரிவித்து, அண்மையில் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டது.

இந்த கடிதம் குறித்து நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் வைத்து விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.

அரசியலமைப்பு பேரவை செயற்படுவதற்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசியம் என்ற நிலையில், தமது கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் விலகியதால், பேரவையினால் செயற்பட முடியாது என்று விமல்வீரசன் குறிப்பிட்டார்.

எனினும் இதுதொடர்பில் தாம் சட்ட ஆலோசனைப் பெற்றிருப்பதாகவும், இதன்படி குறித்த ஐவரின் விலகலானது அரசியலமைப்பு பேரவையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று சபாநாயகர் விளக்கமளித்தார்.

Leave a comment