மற்றுமொரு ஆவா குழு உறுப்பினர் கைது

284 0

ஆவா குழுவின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அவர் நேற்று கைதானதாக கூறப்படுகிறது.

தற்போது அவர் யாழ்ப்பாணம் காவற்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கோப்பாய் காவற்துறை அலுவலகர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆவா குழுவின் இரண்டாம்நிலைத் தலைவர் என்று கூறப்படும் நபர் உள்ளிட்ட 7 பேரும், யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்ப்ட்ட போது, எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment