திருட்டுச் சம்பவம் – 2 கடற்படையினர் கைது

225 0

ஜனாதிபதி செயலக கண்காணிப்பின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் கொள்ளுப்பிடியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தரைக்கு பதியப்படும் பளிங்கு கற்களை திருடிய 2 கடற்படை அலுவலர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஒரவபொத்தானை மற்றும் ஹாலிஎல பிரதேசத்தை சேர்ந்த 29 மற்றும் 36 வயதுடையவர்கள் என காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், திருடப்பட்ட பளிங்கு கற்களின் பெறுமதி 96 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அன்றைய தினமே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கடற்படை அலுவலர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

Leave a comment