மன்னார் மடு தேவாலய பகுதியில் இடி மின்னல் தாக்கும் – இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

251 0

மன்னார் மடு தேவாலய பகுதியில் இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சிலாபம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரின் உடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மடு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் இன்று பிற்பகல் உடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

41 வயதுடைய ஒருவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment