ஜடேஜாவுக்கு பதில் அக்ஸர் பட்டேல்

219 0

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்ஸர் பட்டேல் இந்திய அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 க்கு 0 என்ற அடிப்படையில் வென்றுள்ளது.

இரண்டாவது போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா போட்டி விதிமுறைகளை மீறியமைக்காக ஒரு போட்டியில் விளையாட சர்வதேச கிரிக்கட் பேரவை அவருக்குத் தடை விதித்தது.

இந்த நிலையில், ஜடேஜாவுக்கு பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் பட்டேல் 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி கண்டி – பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment