ரவியை விலகுமாறு பிரதமர் வலியுறுத்த வேண்டும் – சுதந்திர கட்சி அமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை

224 0

பதவி விலக வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் தெரிவிக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பங்கேற்கவில்லை

இந்த நிலையில்,  அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே சுதந்திரக் கட்சியினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அரசாங்கம் ஆகியவற்றின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டியது அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கடமை என சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இதன்போது பிரதமரிடம் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் நேற்று இரவு ஜனாதிபதியை சந்தித்து, அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் அல்லது பதவி விலக்க வேண்டும் என அறியப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.

இந்த நிலையில், எதிர்வரும் சில நாட்களுக்குள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment