சுவிஸ் நாட்டில் 22வயது தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை!!

466 0

சுவிஸ் நாட்டில்   St-Gall  மாநிலத்தில்  வசித்த   22 வயதுடைய  தமிழ் இளைஞன்  ஒருவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது    St-Gall  மாநிலத்தில்  வாழும்  தமிழ்  மக்களை   அதிர்ச்சியிலும், சோகத்திலும்  ஆழ்த்தியுள்ளது.

கடந்த வெள்ளிகிழமை  (04-08-2017)  அன்று,   St-Gall  மாநிலத்தில்   சன நடமாட்டம்  உள்ள  நகர்  பகுதியில்  (St gallen City, Market platz )   ஒரு  உணவகத்தின்   மத்தியில்  அமைந்துள்ள   தோட்டப்  பகுதியில்   இக் கத்திக்குத்து சம்பவம்   நடந்ததாக தெரியவருகிறது.

கழுத்தில்  ஆழமாக கத்திக்குத்து  நடந்ததால், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லபட்டு, தீவிர சிகிச்சையின்  பலனளிக்காததால்   நேற்று   08-08-2017  செய்வாய்கிழமை  அன்று   மரணமடைந்துள்ளார்.

கத்தியால் குத்தியவர் 42வயதுடைய சுவிஸ்  பிரஜை எனவும், அவர் கைது  செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதாகவும் செங்களான்   பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இக்கொலை சம்பவம் எதற்காக நடைபெற்றது என்பது இதுவரை தெரியவில்லை.

Leave a comment