போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது!

201 0

கிராண்பாஸ் – ஒருகொடவத்தை மேம் பாலத்திற்கு அருகில் 20 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ட்ரமடல் எக்ஸ் வகையான 2 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் உந்துருளியில் இவற்றை கொண்டு சென்ற போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ள இந்த சந்தேக நபர், 30 வயதான கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Leave a comment