30 இலட்சம் பெறுமதியான போதை மருந்து – வெல்லம்பிட்டியவில் சந்தேகநபர் கைது

221 0

சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை மருந்து மற்றும் கேரளா கஞ்சா தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்று அமைய வெல்லம்பிட்டிய,மெகொட கொலொன்னாவ பகுதியில் வைத்தே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த போதை மருந்துகளை மோட்டார் சைக்கிள் மூலம் கொண்டு செல்லும் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment