இலங்கை கடற்பரப்பில் வைத்து 50 இந்திய மீனவர்கள் கைது

209 0
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட சுமார் 50 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்கள் பயன்படுத்திய 12 படகுகளும் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கொமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.
நெடுந்தீவு, காரைநகர், காங்கேசன்துறை உள்ளிட்ட கடற்பகுதிகளில் வைத்தே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துவரப்படுவதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட படகுகளுடன், கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் யாழ்ப்பாணம் மீன்பிடி திணைக்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave a comment