உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

237 0

2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை (08) ஆரம்பமாகவுள்ளது. 

நெடுந்தீவு, கச்சதீவு, ஊர்காவற்றுறை உள்ளிட்ட பகுதிகளுடன் நாடளாவிய ரீதியாக 2230 மத்திய நிலையங்களின் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளிவ்.எம்.என்.ஜே. புஸ்பகுமார இந்த தகவலை வௌியிட்டுள்ளார்.

பரீ்டசைகளுக்காக இந்த முறை மூன்று லட்சத்து 15,227 பேர் தோற்றவுள்ளனர்.

அவர்களில் 260 பேர் விசேட தேவையுடைய மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment