இவ்வருடத்தில் மாத்திரம் டெங்கு நோய் மரணம் 350, மீண்டும் எச்சரிக்கை

234 0

இவ்வருடத்தின் கடந்த ஏழு மாதமும் 6 நாட்களில் நாட்டில் டெங்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 வரை உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

ஒரு லட்சத்து 30 ஆயிரம் நோயாளர்கள் நாடு முழுவதிலுமிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோய் பரப்பும் நுளம்புகள் பரவும் அபாயம் உள்ளதாகவும் இதனால், சூழலை டெங்கு நோய் பரவாமல் சுத்தமாக வைத்திருக்க சகலரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது

Leave a comment