யாழ். திருநெல்வேலியில் சில உணவகம் மற்றும் வர்த்தக நிலையங்கள் சீல் வைப்பு!

252 0
யாழ். திருநெல்வேலிப் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற திடீர் சோதனை நடவடிக்கையின்போது சுகாதாரம் இன்றி இயங்கிய உணவகம் மற்றும் வர்த்தக நிலையங்கள் உடனடியாக இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது ,
யாழ். திருநெல்வேலிப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற திடீர் சோதனை நடவடிக்கையின்போது சுகாதாரம் இன்றி இயங்கிய உணவகம் மற்றும் வர்த்தக நிலையங்கள் உடனடியாக இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது. திருநெல்வேலிப் பகுதியில் பல உணவகங்கள் வர்த்தக நிலையங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவதாக சுகாதாரப் பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனை அடுத்து சுகாதார அதிகாரிகள் ஒன்றிணைந்து திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர். இதன்போது உணவகங்கள் மட்டுமன்றி உணவுப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது உணவகங்களில் காணப்பட்ட சுகாதாரச் சீர்கேடுகள் காரணமாகவும் வர்த்தக நிலையங்களில் உணவுப் பொருட்கள் உரிய சுகாதார முறையில் அல்லாது விற்பனைக்கான பொருட்கள்  காணப்பட்ட குற்றத்தின் பெயரில் 5 நிலையங்கள் தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இவற்றினை ஆராய்ந்த யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றம் உடனடியாக மூடி சீல் வைக்குமாறு உத்தரவிட்டதனையடுத்து குறித்த உணவகங்கள் , வர்த்தக நிலையங்கள் மூடிச் சீல் வைக்கப்பட்டதோடு மேலும் 3 வர்த்தக நிலையங்களின் சுகாதாரத்தில் குறைபாடுகள் காணப்பட்டமையினால் எச்சரிக்கை செய்யப்பட்டு 3 தினங்களிற்குள் நிவர்த்தி செய்யுமாறும் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதேவேளை சீல் வைக்கப்பட்ட நிலையங்கள் தொடர்பில் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Leave a comment