யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் பகுதியில் 18 பேர் கைது!

215 0
யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி அல்வாய் பகுதியில் நேற்றிரவு 9-30 மணியளவில் விசேட அதிரடிப்படையினருடன் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 18 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் அனுமதிப்பத்தரங்கள், உரிய ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளனர்.
இதேவேளை துன்னாலைப் பகுதியில் மீண்டும் இன்று காலை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் வீடு வீடாக சென்று குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சோதனையிட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
துன்னாலை குடவத்தை பகுதியில் நேற்றிரவு மேற்கொண்ட தேடுதலில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதியை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் வடமராட்சி 6 ஆம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் துன்னாலை, குடவத்தை மற்றும் அல்வாய் பகுதிகளில் ஒளிந்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்தே குறித்த சுற்றிவளைப்பு தேடுதல் இடம்பெற்றுவருவதாகவும் பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளனர்.

Leave a comment