தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மீது தொடரப்பட்ட 14 அவதூறு வழக்குகள் மீதான விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவர் மீதும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
கடந்த 2012, 2013, 2014 ஆகிய காலகட்டங்களில் சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், நாமக்கல், நீலகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இதுவரை விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் மீது மொத்தம் 14 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் சார்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நடந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் அஜ்மல்கான், வி.டி.பாலாஜி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் இமிலியாஸ் ஆஜரானார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.என்.பிரகாஷ், விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மீது சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தொடரப்பட்ட 14 அவதூறு வழக்குகள் மீதான விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

