வடக்கின் இன்றைய தலைமுறையினரின் போக்கு வருத்தமளிக்கிறது – முதல்வர் சிவி விக்னேஸ்வரன்

214 0
வடக்கில் இன்றைய தலைமுறையினரின் போக்கு மனவருத்தத்திற்குரியதாக அமைந்துள்ளதாக வடக்கு மகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற பண உதவிகள் முறையற்ற விதத்தில் செலவு செய்யப்படுவதே இந்த சமூக சீரழிவிற்கு வலுவான காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பணத்தை இளம் தலைமுறையினர் முறையற்ற விதத்தில் கையாள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் வடக்கில் மாணவர்கள் கல்வி மட்டத்தில் உன்னத நிலையை எட்டியிருந்த போதிலும், அந்த சூழல் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என சிவி விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.

Leave a comment