இருதய சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் உபகரணத்தின் விலை பாரிய அளவில் குறைவு

431 0

இலங்கையில் இருதய சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் உபகரணத்தின் விலை பாரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு முதல் குறித்த உபகரணத்தின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய 75 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட ஸ்டென்ட் உபகரணத்தின் விலை 24 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இருதய நோயிக்கான மருந்து கலந்து வழக்கப்படுகின்ற ஸ்டென்ட் உபகரணத்தின் விலை 3 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

Leave a comment