துன்னாலை பகுதியில் தேடுதல் – 3 பேர் கைது

6240 0

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் காவற்துறையினலும் காவற்துறை அதிரடிப்படையினரும் இணைந்து நடத்தும் தேடுதல் பணிகளின் போது இதுவரையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலோர காவற்படையினர் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வன்முறை சம்பங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 22, 25 மற்றும் 26 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த தேடுதல் பணிகளின் போது 6 டிப்பர் ரக வாகனங்கள் மற்றும் 11 உந்துருளிகள் என்பன மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment