காணாமல் போனோர் தொடர்பான அலுவலக உருவாக்குவது தொடர்பான சட்ட மூலம் குறித்து உயர் நீதிமன்றத்தின் கருத்தைப் பெறுமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.
மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட மூலம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இந்த விவாதத்தை முன்னெடுக்காமல், இது குறித்து உயர் நீதிமன்றத்தின் கருத்தை பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த கடிதத்தில் மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த சட்ட மூலத்தில் உள்ள சில சரத்துகள் தேசிய பாதுகாப்புக்கும், இறைமைக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.