இந்திய – இலங்கை பாலம் குறித்த பேச்சுவார்த்தை இல்லை – ஜனாதிபதி

952 0

MY3- 18_CIஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் ஒன்றை அமைப்பது தொடர்பில் எந்த வகையான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தலவத்துகொட – கனேமுல்ல விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ் நாட்டுக்கும், தலைமன்னாருக்கும் இடையில் பாலம் ஒன்றை அமைக்கப்படவுள்ளதாகவும், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாக்கப்பட்டன.

இந்திய அரசாங்கத்தின் தரப்பிலும் இது தொடர்பான கருத்துக்கள் வெளியாக்கப்பட்டுள்ளன.

எனினும் அரசாங்கத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், இவ்வாறான போலி பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.