கொழும்பு துறைமுக நகரை நிர்வாகிக்க தனியான திணைக்களம்

281 0

harbour_2303261fகொழும்பு துறைமுக நகரை நிர்வாகிக்க தனியான திணைக்களம் ஒன்று உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.
துறைமுக நகர திட்டம் தொடர்பில் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
துறைதுறைமுக நகர அபிவிருத்தி திட்டத்திற்கு,  கடந்த அரசாங்க காலத்தில சூழலியல் மற்றும் பொருளாதார அனுமதி பெறப்பட்ருக்கவில்லை.
அத்துடன் இலங்கை அரசின் கொள்கைகளுக்கு முரணாக சீன அரசாங்கத்திற்கு காணிகளை விற்பனை செய்திருந்தனர்.
இது தொடர்பில், சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அந்த திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த 260 ஹெட்டெயர் நிலப்பரப்பும் தனியான ஒரு திணைக்களத்தின் கீழ் பராமறிக்கப்படும்.
அது மாநகர சபைக்கு உட்பட்டு காணப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.