இன்று முதல் இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை

330 0
அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளில் இன்று முதல் இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை வழங்கப்படுகிறது.
இதன்படி மூன்றாம் தவணைக்கான பாடசாலை கற்றல் செயற்பாடுகள் மீண்டும் செப்டம்பர் மாதம் ஆறாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கிடையில், கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை எட்டாம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் இரண்டாம் திகதி நிறைவடைகின்றது.
அத்துடன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment