இலங்கையின் பெருந்தோட்டபுற பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் டென்மார்குடன் பேச்சு – கல்வி ராஜாங்க அமைச்சர்

205 0
பெருந்தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாகவும், மலையக பெருந்தோட்டப்புறங்களில் தொழிற்பயிற்சி நிலையங்களை அமைப்பது குறித்தும் டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர் டிரோல்ஸ் ரவின்சுடன் கலந்துரையாடப்பட்டதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று நேற்று இடம்பெற்றது.
கடந்த காலங்களில் மலைய பெருந்தோட்டப்பகுதிகளில் டென்மார்க் அரச சார்பற்ற நிறுவனங்களினால் பல்வேறுப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அவை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அவற்றை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினரை வலியுறுத்தியுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a comment