அவுஸ்ரேலியாவுக்கு சென்ற இலங்கையர்கள் 13 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

252 0

அவுஸ்ரேலியாவில் இருந்து 13 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.  இவர்கள் விசேட விமானம்  மூலம்  இன்று (வெள்ளிக்கிழமை) காலை பண்டாரநாயக்காக சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இவர்களிடம் விசாரணைகள் இடம்பெறுவதாக விமான நிலைய பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த 13 பேரும் கடந்த 2012 ஆம் ஆண்டு விமான மூலம் இந்தியாவிற்குச் சென்று அங்கிருந்தும் படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் சென்றுள்ளனர்.

Leave a comment