சமிக்ஞை பலகை வீழ்ந்ததால் வாகன நெரிசல்!

244 0

பேலியகொடை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு – கண்டி பிரதான வீதியில் சமிக்ஞை பெயர் பலகை வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளமையே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கண்டய்னர் ஒன்று இந்த சமிக்ஞை பெயர் பலகையுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment