அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டுக் கொள்கை தொடர்பில் மகிந்த ராஜபக்ச

228 0

தற்போதைய ஆட்சியாளர்கள் வடக்கிற்கும் தெற்கிற்கும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகளை பின்பற்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கல்கிசை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலம் பெற்று கொண்டனர்.
ஆனால் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்திடம், குற்றப்புலனாய்வு பிரிவின் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு சென்று வாக்குமூலம் பெற்று கொண்டது.
இதன்மூலம் அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டுக் கொள்கை நன்கு புலப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave a comment