புகையிரத நிலையங்களில் அனுமதியற்ற வியாபாரங்களைத் தடை செய்ய நடவடிக்கை

223 0

புகையிரதம் மற்றும் புகையிரத நிலையங்களில் நடைபெறும் அனுமதியற்ற வியாபாரங்களை நிறுத்துவதற்குப் புகையிரத திணைக்களம் விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.

அவ்வாறு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகப் புகையிரத பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்தார்.

வியாபாரிகள் மட்டுமல்லாது தொந்தரவாக இருக்கும் யாசகர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் எனவும் புகையிரத பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment