கோப்பாய் பருத்தித்துறையில் பகல்வேளையில் துணிகரத் திருட்டு

356 0
கோப்பாய்  பருத்தித்துறைவீதி நாவலர்பாடசாலை அருகில் உள்ள ஆசிரியர் வீடடில் நேற்றைய தினம் பகல்வேளையில் உள் நுழைந்த திருடர்கள் ஆசிரியரின் தாலிக்கொடி உட்பட 45 பவுன் தங்க நகைகளை களவாடிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் பூபாலசிங்கம் – வரதராயா என்பவரது வீட்டிலேயே நேற்றைய தினம் சுமார் 12.30 மணியளவில் மேற்படி துணிகரத் திருட்டு இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது ,
பருத்தித்துறைவீதி கோப்பாய்  நாவலர்பாடசாலை அருகில் உள்ள ஆசிரியர் வீட்டிலேயே  நேற்றைய தினம் பகல்வேளையில் இவ்வாறு உள் நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த  ஆசிரியரின் தாலிக்கொடி உட்பட 45 பவுன் தங்க நகைகளை களவாடிச் சென்றுள்ளனர். குறித்த வீட்டின் வளவிற்குள் உள் நுழைந்த திருடர்கள் வீட்டின் கதவினை உடைத்து உட்புகுந்துள்ளனர்.
அவ்வாறு உள்நுழைந்த திருடர்கள் வீட்டின் சகல இடங்களையும் சல்லடை போட்டு தேடுதல் நடாத்தி வீட்டில் இருந்த அனைத்து நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர். இவ்வாறு களவாடப்பட்ட நகைகளின் மொத்தப்பெறுமதி 45 தங்கப் பவுன் எனத் தெரியவருகின்றது. களவாடப்பட்ட வீட்டின் உரிமையாளர் யாழ். நகரின் பிரபல வர்த்தக நிறுவனப் பணியாளர் . அதேபோன்று மனைவி புத்தூர் சோமஸ் கந்த ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலை சென்ற ஆசிரியர் மற்றும் பிள்ளைகள் பாடசாலை விட்டு வீடு திரும்பியவேளையிலேயே மேற்படி திருட்டு இடம்பெற்றிருப்பதையறிந்து கோப்பாய் பொலிசாரிடம் முறையிடப்பட்டது. இதனையடுத்து கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.