கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆயுதக் குழுக்கள் இரகசிய கலந்துரையாடல்

245 0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனித்து இயங்குவது தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆயுதக் குழுக்கள் மூன்றும் நேற்றைய தினம் வவுனியாவில் ஓர் இரகசிய கலந்துரையாடலில் வவுனியா இந்துரன் விடுதியில் இடம்பெற்றது.
ரெலோ , புளட் , ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய மூன்று கட்சிகளினதும் தலைவர்களின் ஒப்புதலுடன் இரண்டாம் நிலைத் தலைவர்கள்கள் மட்டுமே கலந்து கொண்டு இது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த்தோடு கட்சிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பார்வையாளரா்களாகவும் கலந்து கொண்டிருந்தனர். இவ்வாறு பார்வையாளராக கலந்து கொண்டவர்களில் புளட் சார்பில் லிங்கநாதனும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் அக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் ஆகியோருடன் ரெலோ சார்பில்  ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.
இதேபோன்று பேச்சுக்களில் ரெலோ சார்பில் குருஸ் தலமையில் இருவரும்  புளட் சார்பில் மோகன் தலமையில் நால்வரும்  பங்கு கொண்டிருந்த்தோடு ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில்  றேகன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலில் மேற்படி சந்திப்புக்கள் தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதெனவும் எதிர்வரும் சந்திப்புக்களில் சகல கட்சிகளில் இருந்தும் தலா நால்வர் வீதம் பங்குகொள்வதாகவும் அடுத்த சந்திப்புக்கள் கட்சி அலுவலகங்களில் இடம்பெறும் எனவும் தீர்மானித்துள்ளனர்.

Leave a comment