புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை சம்பத்தின் போது பிரதான சந்தேக நபரான சுவில் குமார் எனப்படும் சந்தேக நபர் தப்பிச்செல்வதற்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரி உதவிபுரிந்தாக கூறப்படுவது தொடர்பில் நீதிமன்றம் உத்தரவளித்தால் நடவடிக்கையெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
தேசிய அரசின் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
சுவிஸ் குமாரை தப்பவிடுவதற்காக விஜயகலா மகேஸ்வரி மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பிலான காணொளியொன்று அண்மையில் வெளியாகியது.

