பாகிஸ்தானின் பிரதான எதிர்க்கட்சியான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மீது அவரது சொந்த கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
தெற்கு வஜிரிஸ்தான் பழங்குடியின பகுதியைச் சேர்ந்த ஆயிஸா குலாலாய், இம்ரான் கான் கட்சியில் இருந்து விலகியதோடு அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
‘கட்சியில் பெண்களை மிகவும் மோசமாக நடத்தியதாலேயே இம்ரான் கானின் கட்சியில் இருந்து விலகினேன்.
இம்ரான் கான் கடந்த மூன்று ஆண்டுகளாக எனக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை அளித்து வருகிறார்.
வேறு சில உறுப்பினர்களுக்கும் இதுபோன்ற செய்திகளை அனுப்பியிருக்கிறார்.
தற்போது அவரது தொல்லை பொறுக்க முடியாததாலேயே கட்சியிலிருந்து வெளியேறி உள்ளேன் என குறித்த பெண் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
பெண் உறுப்பினர்களை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதால் இம்ரான் கானை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்மசி தலைவர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தி உள்ளது.


