சைட்டம் எதிர்ப்பு பேரணி இன்று மாவனெல்லையில் ஆரம்பம்

254 0
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் பேரணி இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருந்து நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி, ஐந்து நாட்களுக்கு கொழும்பை நோக்கி முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் மாவனெல்லையில் இருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு, இன்று பிற்பகலில் நெலுந்தெனிய பிரதேசத்தில் நிறைவு செய்யப்படவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை குறித்த பேரணி கொழும்பை வந்தடைய உள்ளது.

Leave a comment