தொடருந்து இயந்திர சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் தொழில்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.
இயந்திர சாரதி உதவியாளர்களை இணைத்துக் கொள்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இயந்திர சாரதிகளுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற அநீதிகளை எதிர்த்தும் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.