காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடைபெறுகிறது

337 0

201608100108544967_Pakistan-raises-human-rights-violations-in-Kashmir-with-UN_SECVPFகாஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் புகார் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த சில வாரங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கமாண்டர் பர்கான் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த சில வாரங்களாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் புகார் தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் மற்றும் மனித உரிமைக்கான ஐ.நா.வின் உயர் ஆணையர் அல் ஹூசைனிடம் இந்த புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில் ”ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ச்சியாக மற்றும் அதிர்ச்சியுண்டாக்குகிற வகையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு தனித்தனி கடிதங்களிலும் பிரதமர் நவாஸ் ஷெரீப் சர்வதேச அமைப்புகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் விதிகளை காஷ்மீரில் பின்பற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.