வீடொன்றில் இருந்து கேரள கஞ்சாப்பொதியுடன் ஒருவர் கைது.

357 0

625.0.560.320.160.600.053.800.668.160.90-605-310x165மன்னார் காட்டாஸ்பத்திரி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதியினை மன்னார் பொலிஸ் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று அதிகாலை காலை 4.30 மணியளவில் கைப்பற்றியுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து விரைந்து சென்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் காட்டாஸ்பத்திரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 1.5 கிலோ கிராம் கொண்ட கேரள கஞ்சா பொதியினை மீட்டுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.