காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் பேரணி

266 0
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்க கோரி கடந்த இரண்டாம் மாதம் இருபதாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை  பல பொய்  வாக்குறுதிகளுக்கும் இடையில் நூற்றி அறுபத்தி இரண்டாவது நாளாக நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில் மெதடிஸ் திருச்சபையின் வடக்கு கிழக்கு திரு மாவட்ட அவையின்  ஏற்பாட்டில் கவன ஈர்ப்புப் பேரணி ஒன்று இடம்பெற்றது.
பிற்பகல் ஒருமணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி  ஏ 9  வீதி ஊடாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று கோரிக்கைகள் அடங்கிய மகயர் ஒன்றினையும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்  சுந்தரம் அருமைநாயகத்திடம்  பாதிரியார்கள் மற்றும் காணமால் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் இணைந்து கையளித்தனர்.
இப் போராட்டத்தில்  காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் பாதிரியார்கள் ,ஆயர், மக்கள் எனப் பலரும் கொண்டனர்.

Leave a comment