அன்று இந்தோ-லங்கா, இன்று சீன-இலங்கை, இரண்டும் ஜூலை 29 இல்- மஹிந்த

207 0

இந்தோ- லங்கா ஒப்பந்தமும், ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான சீன – இலங்கை ஒப்பந்தமும் ஒரே தினத்தில் தான் இடம்பெற்றது எனவும், இரண்டின் மூலமும் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பும் ஒன்றுதான் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த 1987 ஆம் ஆண்டு இந்தோ லங்கா ஒப்பந்தம் இடம்பெற்ற தினத்துக்கு சமனான ஒரு தினத்தில் தான் ஹம்பாந்தோட்டை தொடர்பான சீன- இலங்கை ஒப்பந்தமும் (2017 ஜூலை 29) கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை அரசாங்கம் அடுத்து விற்பனை செய்யவுள்ள ஒரே இடம் மத்தளை விமான நிலையம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாக்கும் இடையே ஜூலை 29, 1987 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும்.

இந்த ஒப்பந்தம் இலங்கை ஒரு பல்லின, பல்மத, பல்மொழி நாடாக ஏற்று வடகிழக்கை தமிழ் முஸ்லீம் மக்களின் இணைந்த தாயகப்பிரதேசமாக ஏற்று தமிழ் மொழியை அரச மொழியாக ஏற்று மாகாண சபைகளுடான அதிகாரப் பரவலாக்கத்தை முன்வைக்கின்றது.

இந்தியக் குடியரசின் பிரதம மந்திரி திரு.ராஜிவ்காந்தியும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி திரு.ஜே,ஆர் ஜயவர்தனவும் 1987ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி கொழும்பில் சந்தித்தார்கள்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவை ஆதரித்துத் தீவிரப்படுத்தி மேலும் வலுப்படுத்துவதின் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் அதன் விளைவான வன்செயல்களுக்கும் தீர்வு காண வேண்டியதன் தவிர்க்க முடியாத அவசியத்தையும் இலங்கையிலுள்ள சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் பாதுகாப்பு, நழன்புரி நடவடிக்கைகள், சுபீட்சம் ஆகியவற்றை உணர்ந்தும் வகையிலும் இந்த ஒப்பந்தம்  மேற்கொள்ளப்பட்டது.

Leave a comment