முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்புப் பேரணி

230 0

வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு மற்றும் அமைதிப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுகளின் போராட்டம் மற்றும் நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கேப்பாபுலவு இராணுவ தலைமையகத்துக்கு முன்னால் கேப்பாபுலவு மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் என்பன முடிவுறுத்தப்படாது தொடர்ந்து வருகின்றது.

இந்த நிலையில், குறித்த போராட்டங்களுக்கு ஆதரவாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் இன்று, கவனயீர்ப்பு மற்றும் அமைதிப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்தவகையில், முல்லைத்தீவில் இன்று காலை பேரணி இடம்பெற்று அரச அதிபரிடம் மகஜர் கையளிக்கப்படுவதோடு, மாலை வேளையில், கிளிநொச்சியில் பேரணி இடம்பெற்று அரச அதிபரிடம் மகஜர் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment