முல்லை மாவட்ட அரச ஓய்வூதியர் நலன்புரிச் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் கௌரவிக்கும் நிகழ்வு

194 0
முல்லை மாவட்ட அரச ஓய்வூதியர் நலன்புரிச் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
முல்லை மாவட்ட அரச ஓய்வூதியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் மு. குகதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நீண்ட காலமாக அரச சேவையில் கடமையாற்றி இளைப்பாறிய நிலையில் இன்றும் சமூகத்திற்கு தங்கள் சேவையை வழங்கி வரும் இருபது ஓய்வூதிய அங்கத்தவர்களுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்க்பபட்டனர்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா, வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் ஆ. புவனேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட அரச ஓய்வூதியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment